வருடந்தோறும் தமிழர் பெருவிழா தைத்திருநாளை முன்னிட்டு மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கோடு தமிழ்த் தேசிய கலைபண்பாட்டுப் பேரவையால் மாணவர்களுக்கான திருக்குறள் மனனப் போட்டி நடாத்தப்பட்டு வருகின்றது.
அவ்வகையில் 2024 ஆண்டுக்கான திருக்குறள் மனனப் போட்டி 13/01/2024 சனிக்கிழமை அன்று பேர்த்தில் Hillview Intercultural Community Centre மண்டபத்தில் சிறப்பு நடைபெற்றது.
மாலை மணி 3:15க்கு பேர்த் தமிழ் மூத்தவர்கள் சங்கத்தின் தலைவர் திரு அமீர் அலி, திருமதி சுதந்தினி நரேந்திரன், திரு பிரசாந் தியாகலிங்கம் மற்றும் திரு ரத்தினவேல் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மங்கல விளக்கினை ஏற்றி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் மாணவிகளால் தமிழ்மொழி வாழ்த்து பாடப்பட்டதை தொடர்ந்து திருமதி சுதந்தினி நரேந்திரன் அவர்களின் வாழ்த்துரை இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து சிறுவர்களுக்கான திருக்குறள் மனனப் போட்டிகள் ஆரம்பமாகின. ஒவ்வொரு பிரிவுக்குமான மாணவர்களுக்கு தனிப்பட்ட இலக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. போட்டியில் அதிகீழ் பிரிவு, கீழ்பிரிவு, மத்திய பிரிவு, மற்றும் மேல் பிரிவு என்னும் பிரிவுகளில் முப்பது வரையான மாணவச் செல்வங்கள் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டியின் நடுவர்களாக திரு இளம்பருதி பன்னீர் செல்வம், திருமதி மேனகா கிருபாசுதன் மற்றும் திருமதி சங்கீதா அலேங்கேஸ்வரன் ஆகியோர் செயற்பட்டனர்.
போட்டியின் முடிவில் போட்டியில் கலந்து சிறப்பித்த மாணவச்செல்வங்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டு மாலை 6.00மணிக்கு நிகழ்ச்சிகள் இனிதே நிறைவடைந்தன. திருக்குறள் மனனப் போட்டி நிகழ்ச்சிகளை திரு வாசன் அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தார்.





























































































Leave a comment